நாள் முழுவதும் கடுமையாக உடல் உழைப்பை தந்து வியர்வை சிந்தும் ஒரு கூலி தொழிலாளியின் வாழ்கையையும், ஏசி அறைக்குள் மூளைக்கு மட்டும் வேலை கொடுக்கும் கணினி துறையில் பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையையும் காட்டியிருக்கும் இயக்குனர், இருவரும் சம்பளம் வாங்கிய பின் குறைபட்டு கொள்வதையும் அழகாக காட்டியுள்ளார். இருப்பதை வைத்து கொண்டு சந்தோஷமாக வாழ சொல்கிறது இந்த குறும்படம்.