வினை விதைத்தவர்கள் வினை அறுத்து தான் தீர வேண்டும், குடி, புகை மற்றும் போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் தங்களோடு சேர்த்து தங்கள் குடும்பத்தினருக்கும் தங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் வேதனைகளை விதைத்து விடுகிறார்கள், அவர்கள் விதைத்த வினை அவர்களுக்கே விரோதமாக மாறி உயிரையும் குடித்து விடுகிறது. புகைப்பழக்கம் உள்ளவர்கள் உள்ளே இழுக்கும் புகை அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆனால் வெளியிடும் புகையோ சுற்றியிருக்கும் எல்லோருக்கும் தீங்கு விதைத்து விடுகிறது. புகைப்பவர்களுக்கு ஒரு நல்ல பாடம் இந்த முற்பகல் செய்யின் - குறும்படம்