Saturday 3 February 2018

I AM WATER - குறும்படம்


சாதிகள் இல்லையடி பாப்பா என்று முண்டாசு கவிஞன் பாரதியார் என்றோ பாடல் இயற்றி சாதி வேறுபாடு பார்க்க கூடாது என்று வலியுறுத்தி இருந்தாலும் இன்றும் நம் நாட்டில் சாதி பார்த்து உயர்வு, தாழ்வு பாராட்டும் மனிதர்கள் இருக்கவே செய்கின்றனர், இது போன்ற சாதி வெறி பிடித்தவர்களால் நாட்டில் சாதியின் பெயரால் வன்முறை வெறியாட்டங்கள் பல நடந்துள்ளன, அதனால் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர், ஆனாலும் சாதி பேதம் பார்ப்பவர்கள் இன்னும் திருந்தியதாக தெரியவில்லை, வானிலிருந்து பொழியும் மழை நீர் பூமியில் வாழும் மனிதர்கள் மீது சாதி பார்த்து பொழிவதில்லை... குடிக்கும் தண்ணீரை கொண்டு மிக அழகாக சாதி வேறுபாடு பார்ப்பவர்களுக்கு அருமையாக செய்தி சொல்கிறது I AM WATER - குறும்படம்   

--------------------------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர
--------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்